Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செந்தில், ரமேஷ்கண்ணா, சந்தானபாரதி: இவர்கள் மகன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

Webdunia
வியாழன், 5 அக்டோபர் 2017 (22:53 IST)
நகைச்சுவை நடிகர்கள் ரமேஷ்கண்ணா, செந்தில் மற்றும் இயக்குனர்-நடிகர் சந்தானபாரதி ஆகியோர் தங்கள் வாரிசுகளை சினிமாத்துறைக்கே கொண்டு வந்துள்ளனர். அதிலும் நடிகராக ஆக்காமல் அனைவரும் தங்கள் மகன்களை இயக்குனர்களாக்க முயற்சித்து வருகின்றனர்.



 
 
ஆம், செந்தில் மகன் ஹேமச்சந்திரபாபு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தற்போது சொந்தமாக படம் இயக்க முயற்சித்து வருகிறார்.
 
அதேபோல் ரமேஷ்கண்ணாவின் இரண்டு மகன்களுமே தற்போது உதவி இயக்குனர்களாக உள்ளனர். மூத்த மகன் ஜஸ்வந்த், ஏ.ஆர்.முருகதாசிடமும், இளையமகன் பிரஜிஷ் இயக்குனர் மணிரத்னத்திடமும் உதவி இயக்குனர்களாக உள்ளனர். விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்களாம்
 
அதேபோல் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி, இயக்குனர் விஜய்யிடமும் எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா, இயக்குனர் அட்லியிடமும் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments