Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் செல்வராகவன் படத்தின் கதை விக்ரம் படத்தின் கதையா?

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:21 IST)
தனுஷ் செல்வராகவன் இணைந்து உருவாக்க இருக்கும் படத்தின் கதை சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம்மை வைத்து செல்வராகவன் உருவாக்கிய சிந்துபாத் படம்தான் என சொல்லப்படுகிறது.

தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்  உருவாகவுள்ள ஆயிரத்தில் ஒருவர் 2 பாகத்தின் டைட்டில் லுக் நாளை வெளியாகவுள்ளதாக செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரின் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், செல்வராகவன் அடுத்து எப்போது படம் எடுப்பார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தபோது,  அவர் தனது தம்பியை வைத்து இப்போது ஒரு படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார்.

இந்த படத்தின் கதை ஏற்கனவே அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரம் மற்றும் சுப்ரமண்யபுரம் ஸ்வாதி ஆகியோரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பு நடத்தி பின்னர் கைவிடப்பட்ட சிந்துபாத் படத்தின் கதைதான் என சொல்லப்படுகிறது. அதை உறுதி செய்வது போல நேற்று வெளியான போஸ்டரும் குளிர்பிரதேசத்தில் நடக்கும் கதை என்பது போலவே உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments