Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர்களிடம் இருந்து விருதினை பெற மாட்டேன்: அடம் பிடித்த சத்யராஜ்

Webdunia
சனி, 20 ஜனவரி 2018 (06:30 IST)
சமீபத்தில் விகடன் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் 'பாகுபலி' மற்றும் 'பாகுபலி 2'; ஆகிய படங்களில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜூக்கு சிறந்த குணசித்திர விருது வழங்கப்பட்டது.

இந்த விருதினை சத்யராஜ் ஒரு பெரிய நடிகரிடம் இருந்து பெறுவதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சத்யராஜோ தனக்கு எந்த நடிகரிடம் இருந்து விருதை பெற விருப்பமில்லை என்றும், உண்மையான சமூக போராளிகள் யாரையாவது தேர்வு செய்து விருதினை கொடுங்கள் என்று கேட்டு கொண்டாராம்.

இதனையடுத்து சத்யராஜின் விருப்பப்படி சமீபத்தில் பெற்றோர் என்றும் பாராமல் தண்டனை வாங்கி கொடுத்த சமூக நீதி போராளி கவுசல்யாசங்கர் மற்றும் திருமுருகன் காந்தி ஆகியோர்கள் இந்த விருதை சத்யராஜூக்கு கொடுத்தனர். சத்யராஜின் இந்த முடிவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் கிடைத்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments