Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையைக் கிளப்பிய குற்றப்பரம்பரை…. சசிக்குமார் இயக்கத்தில் முக்கிய மாற்றங்கள்!

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (10:18 IST)
குற்றப்பரம்பரை கதையை இயக்குனர் சசிக்குமார் இயக்கத்தில் வெப் சீரிஸாக உருவாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை பல வருடங்களாக எடுக்கவேண்டும் என இயக்குனர் பாரதிராஜா முயற்சி செய்தார். சிவாஜி மற்றும் சரத்குமார் நடிப்பில் பூஜை நடைபெற்று போஸ்டரும் வெளியானது. ஆனால் தடைபட்டது. பின்னர் மீண்டும் ஒரு முறை முயன்றார். அப்போதும் அவரால் படமாக்க முடியவில்லை. இதேபோல இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரையினர் பற்றிய கதையை திரைப்படமாக்க உள்ளதாக அறிவித்தார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை.

இந்நிலையில் இப்போது இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அது சம்மந்தமான கதையை திரைப்படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதையை எழுத்தாளர் வேல ராமமூர்த்தி எழுத உள்ளதாகவும், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் தயாரிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சசிகுமாரே அதில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அதில் சில மாற்றங்கள் நடந்துள்ளன. அது என்னவென்றால் இந்த கதையை திரைப்படமாக எடுக்காமல் வெப் தொடராக எடுக்க முடிவு செய்துள்ளதாம் படக்குழு. மேலும் இதைப் படமாக்க இயக்குனர்கள் பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரிடமும் சசிக்குமார் ஆகிய இருவரிடமும் சம்மதம் வாங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது

Source வலைப்பேச்சு
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments