Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்கார் எதிரொலி: கே.பாக்யராஜ் திடீர் ராஜினாமா

Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2018 (12:55 IST)
இயக்குனர் கே.பாக்யராஜ் திரை எழுத்தாளர் சங்க தலைவர் பதவி இருந்து ராஜினாமா செய்துள்ளது கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவிற்கு சர்கார் திருட்டு கதை விவகாரம் காரணம் என கூறப்படுகிறது. 
 
சர்கார் கதை திருட்டு கதை என்ற விவகாரத்தை முன்னெடுத்த கே.பாக்யராஜ் இதற்கு ஒரு நல்ல முடிவையும் கொண்டுவந்தார். அதோடு, இந்த விவகாரத்தில் தனக்கு பல காயங்கள் ஏற்பட்டதகாவும் குறிப்பிட்டிருந்தார். 
 
இந்நிலையில், இன்று அதிரடியாக தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தலைவர் பதவியேற்று 6 மாதங்களே ஆன நிலையில் இவர் இந்த முடிவை எடுத்துள்ளதற்கு சர்கார் ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. 
அதாவது சர்கார் கதையும் செங்கோல் கதையும் ஒன்று என கூறியிருந்ததால் எனக்கு பல சிக்கல்கள் ஏற்பட்டது. நான் ஒரு வேலை தேர்தலில் நிற்காமல் தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதா என தெரியவில்லை. அடுத்து தேர்தல் நடைபெற்றால் கண்டிப்பாக போட்டியிடுவேன். 
 
சர்கார் குறித்து புகார் வந்த போது உண்மையாகவும் நியாமாகவும் முடிவு எடுக்க முடிவு செய்தேன். இதனால் முருகதாஸிடம் கெஞ்சியும் அவர் உடன்படாததால் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியாக இருக்கும் படத்தின் கதையை கூறும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். இது தவறான செயல், இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
 
அதோடு, எனக்கு நடந்த ஒழுங்கீனங்களையும், சிக்கல்களையும் சங்க நலன் கருதி வெளியிட மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments