Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்னி நதி பாடலை பாடிய நடிகர் விஜய்! – சரத்குமார் சொன்ன புது தகவல்!

Webdunia
புதன், 28 செப்டம்பர் 2022 (12:25 IST)
பொன்னியின் செல்வனில் வரும் பொன்னி நதி பாடலை விஜய் பாடினார் என நடிகர் சரத்குமார் கூறியுள்ளார்.

கல்கி எழுதி புகழ்பெற்ற நாவலான பொன்னியின் செல்வனை நீண்ட கால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ப்ரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் சரத்குமார், பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ALSO READ: ரசிகருக்கு ‘பளார்’ அறை குடுத்த நடிகை! – சர்ச்சை வீடியோ குறித்து விளக்கம்!

ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், நடிகர் விஜய் பொன்னியின் செல்வனில் வரும் ‘பொன்னி நதி’ பாடலை அடிக்கடி பாடிக் கொண்டே இருப்பார் என கூறியுள்ளார். சரத்குமார், விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை முதலில் எடுக்க முயன்றபோது விஜய்யை வந்தியத்தேவனாக நடிக்க வைக்க விரும்பினார் என்ற பேச்சு உண்டு. அதனால் வந்தியத்தேவனாக விஜய்யை எடிட் செய்து பலர் சமூக வலைதளங்களில் கூட பதிவிட்டனர். இந்நிலையில் விஜய்யே வந்தியத்தேவனின் பொன்னி நதி பாடலை பாடியிருப்பது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments