Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீரா நந்தனுக்காக தூங்காமல் நடித்த சரத்குமார்

மீரா நந்தனுக்காக தூங்காமல் நடித்த சரத்குமார்
, செவ்வாய், 16 டிசம்பர் 2014 (13:04 IST)
சரத்குமார் இரண்டு வேடங்களில் நடித்துள்ள சண்டமாருதம் படத்தின் கிளைமாக்ஸுக்காக படக்குழுவினர் 32 மணிநேரம் தொடர்ச்சியாக தூங்காமல் வேலை பார்த்துள்ளனர்.
சரத்குமார் கதை எழுத, ராஜேஷ் குமார் திரைக்கதை அமைக்க, ஏ.வெங்கடேஷ் சண்டமாருதத்தை இயக்கியுள்ளார். இதில் ஓவியா, மீரா நந்தன் என இரு நாயகிகள். மீரா நந்தன் சமீபத்தில் துபாயில் இயங்கும் ஒரு எப்எம்மில் வர்ணனையாளராக வேலைக்கு சேர்ந்தார்.
 
அதன் காரணமாக அவர் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் காட்சியை குறுகிய காலத்தில் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக 32 மணி நேரம் கிளைமாக்ஸ் காட்சிக்காக சரத்குமார் உள்ளிட்டவர்கள் தூங்காமல் வேலை பார்த்துள்ளனர்.
 
ஜேம்ஸ் வசந்தன் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil