Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பொதுக்குழு கூட்டப்படாததற்கு சரத்குமாரே காரணம் - விஷால் குற்றச்சாட்டு

பொதுக்குழு கூட்டப்படாததற்கு சரத்குமாரே காரணம் - விஷால் குற்றச்சாட்டு
, புதன், 18 நவம்பர் 2015 (15:08 IST)
நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்று இவ்வளவு நாள்கள் ஆகியும் பொதுக்குழு இன்னும் கூட்டப்படாமல் உள்ளது. அதற்கு சரத்குமாரே காரணம் என பதிலளித்துள்ளார் விஷால்.


 
 
புதிய நிர்வாகிகள் பதவியேற்ற சில தினங்களில் முன்னாள் தலைவர் சரத்குமார் சங்கத்தின் வரவு செலவு கணக்குகளை ஒப்படைத்தார். அதனை ஆடிட்டர் தலைமையில் தணிக்கை செய்து வருகின்றனர். முறையான ரசீது இல்லாமல் பல லட்சங்கள் செலவு செய்துள்ளது தணிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
இந்நிலையில், பொதுக்குழுவை ஏன் இன்னும் கூட்டவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த விஷால், 2014 - 2015 ஆண்டுகளுக்கான வரவு செலவு கணக்கை சரத்குமார் இன்னும் ஒப்படைக்கவில்லை. அவர் அதனை உடனே ஒப்படைத்தால் ஃபெப்ரவரியில் பொதுக்குழு கூட்டப்படும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil