Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் இணைந்த ‘நெற்றிக்கண்’ நடிகர்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (13:28 IST)
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நயன்தாரா நடித்த நெற்றிக்கண் திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
சூர்யா நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் காரைக்குடியில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது 
 
இந்த நிலையில் இந்த படத்தில் நடிகர் சரண் சக்தி இணைந்து உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே நயன்தாரா நடித்த நெற்றிக்கண் என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் என்பதும் அதற்கு முன்னர் வடசென்னை படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
எதற்கும் துணிந்தவன் படத்தில் சரண் சக்திக்கு முக்கிய கேரக்டர் என்றும் இந்த படம் வெளிவந்தால் அவருக்கு தமிழ் திரையுலகில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

“ஓடிடி என்பது நூலகம் போன்றது… அதனால் தியேட்டர் பாதிக்கப்படாது” – மாரி செல்வராஜ் பதில்!

ஹன்சிகா நடிக்கும் காந்தாரி படத்தின் ரிலீஸ் எப்போது?

“என் அப்பாவின் பயோபிக்கைக் கண்டிப்பாக எடுப்பேன்..” – நடிகர் சூரி ஆசை!

தமிழன் இந்தியாவிற்கு தலைமை தாங்க வேண்டும்.. எந்த I.N.D.I.Aவை சொல்றார்! – இந்தியன் 2 பட விழாவில் கமல்ஹாசன்!

இசைஞானி பிறந்தநாள்: அசத்தல் போஸ்டரை வெளியிட்ட ‘இளையராஜா’ படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments