Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஷாந்த் சிங்கோடு தாய்லாந்தில் டேட்டிங்!? - சாரா அலி கான் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்!

Webdunia
திங்கள், 28 செப்டம்பர் 2020 (12:37 IST)
சுஷாந்த் சிங் தற்கொலை விவகாரத்தில் போதை பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் போதை பொருள் பயன்பாடு குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கு போதை பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

சுஷாந்த் சிங் காதலி ரியா அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து நடிகை சாரா அலி கான், ரகுல் ப்ரீத் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட பாலிவுட் நடிகைகளிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தீபிகா படுகோனிடம் நடத்திய விசாரணையில் போதை பொருள் குறித்து செல்போனில் பேசிக் கொண்டதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சாரா அலி கான், தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட போதை பொருள் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நடிகைகளிடம் இருந்தும் அவர்களது செல்போன்களை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் விசாரணையில் நடிகை சாரா அலி கான் தான் சுஷாந்த் சிங்குடன் டேட்டிங் சென்றதாக ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாரா அலி கானும், சுஷாந்த் சிங்கும் “கேதர்நாத்” படத்தில் ஒன்றாக நடித்தனர். அப்போதிருந்தே இருவருக்கும் காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் இருவரும் தாய்லாந்திற்கு டேட்டிங் சென்றதாகவும், சுஷாந்திற்கு போதை பழக்கம் இருந்ததாகவும், தனக்கு போதை பழக்கம் கிடையாது என்றும் சாரா அலி கான் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments