Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா ரஞ்சித் மேல் மரியாதை இருக்கிறது… இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!

vinoth
வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (07:51 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார்.

தற்போது தமிழைத் தாண்டியும் பிற மொழி படங்களுக்கு இசையமைத்து வரும் சந்தோஷ் நாராயணன் முதல் முதலாக சென்னையில் இசை கச்சேரி நடத்த உள்ளார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘நீயே ஒளி’ என்ற இசை கச்சேரி நடக்க உள்ளது.

இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. அப்போது பேசிய சந்தோஷ் நாராயணன் இயக்குனர் பா ரஞ்சித் பற்றி பேசினார். அப்போது “இந்த நிகழ்ச்சி குறித்து முதலில் ட்வீட் செய்தது அவர்தான். இப்போதெல்லாம் சினிமாவில் ஒரு கூட்டணி அமைத்து படம் பண்ணும் காலம் முடிந்துவிட்டது. அந்த படத்துக்கு எந்த கூட்டணி தேவையோ அதையமைத்து படம் பண்ணுகிறார்கள். அப்படி இணைந்து பணியாற்றாதவர்கள் சண்டை போட்டி பிரிந்துவிட்டார்கள் என்று அர்த்தம் இல்லை. பா ரஞ்சித் மீது எனக்கு மரியாதை உள்ளது. தங்கலான் படத்துக்காக அவருக்கு எனக்கு வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலவையான விமர்சனங்கள் வந்தும் முதல் நாள் வசூலில் கலக்கிய எம்புரான்!

சிக்கலில் மாட்டிய வீர தீர சூரன் தயாரிப்பாளர்… விக்ரம் செய்த உதவியால் ரிலீஸான படம்!

மிஷ்கின் மேல் எந்த கோபமும் இல்லை… நான் ஏன் அப்படி பேசினேன்?- பிரபல நடிகர் விளக்கம்!

சினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளை ஊடகங்களில் ஒளிபரப்ப வேண்டாம்: தயாரிப்பாளர் சங்கம்

விஜய் பிறந்தநாளுக்கு ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து வரும் சர்ப்ரைஸ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments