Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்...

ரஜினியின் அடுத்த படத்திற்கு இசையமைக்கிறார் சந்தோஷ் நாராயணன்...
, வெள்ளி, 5 மே 2017 (19:07 IST)
நடிகர் ரஜினிகாந்த நடிக்கும் அடுத்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் என்பது உறுதியாகியுள்ளது.


 

 
இயக்குனர் பா.ரஞ்சித்தின் முதல் படமான அட்டகத்திக்கு சந்தோஷ் நாராயணனே இசைமயமைத்தார். அப்படத்தின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து ரஞ்சித் இயக்கியர் மெட்ராஸ் படத்திற்கும் அவர்தான் இசையமைத்தார். 
 
அதன் பின், நடிகர் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி படத்திற்கும் அவரே இசையமைத்தார். இப்படத்தின் இடம்பெற்ற நெருப்புடா, மாயநதியிலே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. 
 
அடுத்து, நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இது ரஜினிக்கு 161வது படமாகும். அப்படத்திற்கான வேலையில் ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

53 மரங்கள் தாவிய ஜெயம் ரவி