Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானத்தின் ‘தில்லுக்கு துட்டு’: இரண்டாம் பாகம் உருவாகிறது…

Webdunia
வெள்ளி, 2 மார்ச் 2018 (11:33 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. 
‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் வெளியான படம் ‘தில்லுக்கு துட்டு’. 2016ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தில், சந்தானம் ஹீரோவாக  நடித்திருந்தார். அஞ்சால் சிங், கருணாஸ், ஆனந்த்ராஜ், செளரப் சுக்லா உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். எஸ்.தமன் மற்றும் கார்த்திக் ராஜா  இருவரும் இசையமைத்தனர்.
 
சூப்பர் ஹிட்டான இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது. சந்தானம் ஜோடியாக தீப்தி ஷெட்டி நடிக்கிறார். தீபக் குமார்பதி ஒளிப்பதிவு  செய்ய, ஷபிர் இசையமைக்கிறார். ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்களுக்கு இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் க்யூட் புகைப்படங்கள்!

அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக்ஸ்!

பா ரஞ்சித் படத்தில் கதாநாயகியான நாக சைதன்யாவின் மனைவி!

வழக்கு எண், மாநகரம் படங்களில் நடித்த ‘ஸ்ரீ’யா இது?.. அடையாளமே தெரியாத அளவுக்கு இப்படி ஆகிட்டாரே!

ரெட்ரோ என்பதற்கு இதுதான் அர்த்தம்… தலைப்புக்கு விளக்கம் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments