Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ள சந்தானம்

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ள சந்தானம்

சர்வர் சுந்தரம் படப்பிடிப்பிற்காக துபாய் சென்றுள்ள சந்தானம்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2016 (15:27 IST)
சந்தானத்தின் தில்லுக்கு துட்டு' படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, ஒரு கமர்ஷியல் ஹீரோவாக தன்னுடைய வெற்றி பயணத்தை 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் மூலம் தொடர இருக்கிறார் சந்தானம். இப்படத்தை தயாரிப்பு ஜெ செல்வக்குமார், ஆனந்த் பல்கி இயக்கி வர, மராத்திய நடிகை வைபவி ஷந்திலியா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


 
 
இந்நிலையில் இதற்காக துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய 'சர்வர் சுந்தரம்' படக்குழுவினர், சந்தானத்திற்கு துபாய் ரசிகர்கள் கொடுத்த விமர்சையான வரவேற்பால் வியந்து போய் இருக்கின்றனர்... தமிழ் சினிமாவில் சந்தானத்தின் ரசிகர் பலத்தை பற்றி நன்கு அறிவோம், ஆனால் தற்போது துபாயில் கொடுக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட வரவேற்பானது, உலகளவில் உள்ள அவரது எண்ணற்ற ரசிகர்களை பற்றி உணர்த்தி இருக்கிறது. 
 
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்கு பிறகு 'சர்வர் சுந்தரம்' படத்தின் தொழில் நுட்ப பணிகள் ஆரம்பமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. வெற்றிகரமான கமர்ஷியல் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானத்தின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படமானது, வர்த்தக உலகில் புதியதொரு சாதனையை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தெலுங்கு பிரேமம் இசை வெளீயிட்டு விழா படங்கள்