Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன்

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (11:39 IST)
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

 
கடந்த ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. என்னென்னவோ செய்தும் போராட்டத்தைக் கலைக்க வழியில்லாத அரசு, கடைசியில் காவல்துறையை வைத்து தடியடி நடத்தி கலைத்தது. இதனால், பயங்கர வன்முறை வெடித்தது.
 
இதுகுறித்து விசாரிக்க நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்ற சென்னை, திருச்சி, மதுரை, கோவை பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று விசாரணை நடத்திய நீதிபதி, நேற்று சேலம் சென்றார்.
 
பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய நீதிபதி, “ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக இதுவரை 1951 பேர் பிரமாணப் பத்திரம்  அனுப்பியுள்ளனர். இவர்களில் 447 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 108 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். போராட்டத்தின்போது பணியில் இருந்த காவலர்களுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல, போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகர், நடிகைகளும் சம்மன் அனுப்பி விசாரிக்கப்பட இருக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments