Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால கணவரை மிரட்டிய சமந்தா

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2017 (11:59 IST)
ராக்கி கட்டி அண்ணன் ஆக்கிவிடுவேன் என நடிகை சமந்தா தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவை மிரட்டியுள்ளார்.


 

 
நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா ஆகியோருக்கு அடுத்த மாதம் கோவாவில் திருமணம் நடைபெற உள்ளது. நாக சைதன்யா நடித்துள்ள யுத்தம் சரணம் என்ற படம் வரும் 8ஆம் தேதி வெளியாக உள்ளது.
 
இதற்காக சமந்தாவும் தனது காதலருடன் இணைந்து அவருக்காக படத்தை விளம்பரம் செய்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் விளம்பரம் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்ட நாக சைதன்யா அவரது காதல் அனுபவம் குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-
 
நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் வீட்டிற்கு தெரியாமல் காதலித்து வந்தோம். சமந்தா, வீட்டில் உள்ளவர்களிடம் சீக்கிரமாக தெரிவிக்குமாறு என்னை வற்புறுத்தினார். நான் வீட்டில் சொல்லாமல் காலம் கடத்தி வந்தேன். 
 
சமந்தா என்னை மிரட்டினார், நீ வீட்டில் காதலை சொல்லி அனுமதி வாங்காவிட்டால் ராக்கி கட்டி அண்ணண் ஆக்கிவிடுவேன் என்றார். அதன்பிறகே நான் வீட்டில் காதலை தெரிவித்தேன் என்றார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தில் அமீர்கான் வரும் காட்சிகள் எத்தனை நிமிடம்?... அவரே வெளியிட்ட தகவல்!

ராமாயணம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்த விஜய் சேதுபதி!

சூர்யா 45 படத்தின் டீசர் & டைட்டில் ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

என்னிடம் எப்போதும் என் தாத்தாவைப் பற்றி மட்டுமே கேட்பார்கள்.. வேறு கேள்வியே இல்லையா –யதீஷ்வரன் ஆதங்கம்!

யுவனுக்கும் எந்த பிரச்சனையுமில்லை… ரசிகர்கள் என்னைத் திட்ட வேண்டாம் – இயக்குனர் ராம் !

அடுத்த கட்டுரையில்
Show comments