Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவிற்கு இவர்களை பிடிக்காதாம்....

சமந்தாவிற்கு இவர்களை பிடிக்காதாம்....
, சனி, 27 ஆகஸ்ட் 2016 (13:44 IST)
மற்றவர்களை குறை சொல்லி பேசுவதும், அவ்வாறு செய்பவர்களையும் எனக்கு பிடிக்காது என்று நடிகை சமந்தா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.


 


நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ” சிலர் மற்றவர்களை பற்றி எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள். கேலி-கிண்டல் செய்வார்கள். அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவார்கள். இது மோசமான பழக்கம் ஆகும். இப்படிப்பட்டவர்களை எனக்கு அறவே பிடிக்காது” என கூறியுள்ளார்.

மேலும் அவர், என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது என்னை வருத்தப்பட வைக்கிறது. நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். ‘பிரம்மோற்சவம்’ (தெலுங்கு) படத்தில் “நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்ற ஒரு வசனம் மிகவும் பிடிக்கும். எனவே நிறைய நல்ல விஷயங்கள் நம்மை சுற்றி நடக்கிறது. அதை தேடிக் கண்டுபிடித்து பேசலாம்.

மற்றவர்களை குறை பேசி திரிவதால் எந்த பயனும் இல்லை. நான் நல்லவைகளை மட்டுமே பேச வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். இப்படி பேசுவதன் மூலம் நல்ல சிந்தனைகள் உருவாகும். அது உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது என கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயம் ஒரு பயணம் - திரை விமர்சனம்