Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சல்மான் கான் மணிபர்ஸ் அபேஸ் செய்த கவர்ச்சி பெண்கள்

சல்மான் கான் மணிபர்ஸ் அபேஸ் செய்த கவர்ச்சி பெண்கள்
, புதன், 7 அக்டோபர் 2015 (18:38 IST)
சல்மான்கான் தன்னை மறந்து விருந்தின் உச்சத்திற்கு சென்ற போது , அவரது மணிபர்ஸ், கூலிங்கிளாஸ் உள்ளிட்ட அவருடைய பொருட்கள்  அனைத்தயும் விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி பெண்கள் திருடி சென்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

மும்பையில் நடந்த இரவு விருந்து ஒன்றில் நடிகர் சல்மான்கான், நடிகைகள் ஸ்ரேயா, சுஷ்மிதா சென் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
அப்பொழுது, கவர்ச்சியாக வந்த 4 பெண்கள் சல்மான்கானை சந்தித்து, நாங்க உங்களுடைய தீவிர ரசிகைகள் என்றும் நீங்க நடித்த படங்கள் எல்லா படங்களையும் முதல் நாளிலேயே பார்த்து விடுவோம்  என்று தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு சல்மான் கான் மிகவும் குளிர்ந்து போனார். அந்நேரத்தில் வந்தவர்களில் ஒரு பெண் சல்மான்கானிடம் பேசிக் கொண்டிருந்தார். மற்ற 3 பெண்களும் மாயமாகி விட்டார்கள். விருந்து  முடிந்தது. இரவு நீண்ட நேரத்துக்குபிறகு வீட்டுக்கு புறப்பட சல்மான் கான தயாராகும் போது
 
சல்மான் கானின் மணிபர்ஸ், கூலிங்கிளாஸ் உள்ளிட்ட அவருடைய பொருட்கள்  அனைத்தும் காணமால் போனது.  அதிர்ச்சி அடைந்த சல்மான் இது குறித்து ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார்.

சல்மான் கானிடம் பேசிக் கொண்டு இருந்த பெண்கள் ‘அபேஸ்’ செய்து விட்டு சென்றது தெரிய வந்தது. இதுபற்றி போலீசில் புகார் செய்யலாம் என்று ஹோட்டல் நிர்வாகத்தினர் கூறினார்கள். இதை பெரிதாக்க விரும்பாத சல்மான்கான் புகார் வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
 
சல்மான்கான் மட்டுமல்ல ஸ்ரேயா, சுஸ்மிதாவின் பொருட்களையும் அந்த கவர்ச்சி பெண்கள் திருடி சென்று விட்டதாக விருந்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.  அந்த அளவு அனைவரும் தன்னை மறந்து விருந்தின் உச்சத்திற்கு சென்றதாக ஹோட்டல் நிர்வாகிகள் தரப்பில் தகவல் கசிந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil