Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தள்ளிப்போகும் பிரபாஸின் சாஹோ – பின்னணி என்ன ?

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (13:22 IST)
ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாவதாக இருந்த பிரபாஸின் சாஹோ படம் ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி, 'பாகுபலி 2' ஆகிய இரண்டு திரைப்படங்களால் இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவில் பிரபலம் ஆனவர் நடிகர் பிரபாஸ். இந்த இரண்டு படங்களை அடுத்து பிரபாஸ் நடித்து வந்த 'சாஹோ' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் பல படங்கள் தங்கள் ரிலிஸைத் தள்ளி வைத்தன. இந்நிலையில் இப்போது இந்தப்படத்தின் வெளியீடு ஆகஸ்ட் 30 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சண்டைக்காட்சிகளில் நேர்த்தியைக் கொண்டு வருவதற்கு இன்னும் சிறிது நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸோடு நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், மந்திரா பேடி, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். தனிஷ்க் பக்ஷி இசையமைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பராசக்தி’ சிக்கலில் சிக்கியது தனுஷூக்கு மகிழ்ச்சியா? கோலிவுட்டில் பரபரப்பு..!

இட்லிகடை, பராசக்தியை முடக்குகிறதா அமலாக்கத்துறை.. தலைமறைவாகிய தயாரிப்பாளர்..!

45 நாட்களில் கமல்ஹாசனின் அடுத்த படம்.. ஹீரோயின் இல்லை.. லிப்லாக் இல்லை..!

என்ன வேணும் உனக்கு.. த்ரிஷாவின் மயங்க வைக்கும் நடனத்தில் ‘தக்லைப்’ பாடல்..!

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments