Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யிடம் மன்னிப்புக் கேட்கும் எஸ் ஏ சந்திரசேகர்!

Webdunia
வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:28 IST)
நடிகர் விஜய்யின் தந்தையான எஸ் ஏ சந்திரசேகர் தனது மகனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் இரு மாதங்களுக்கு முன்னர் தனது மகன் விஜய் பெயரில் கட்சி ஒன்றை தொடங்கினார். ஆனால் அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என கூறிய விஜய் தனது ரசிகர்கள் அந்த கட்சியில் இணைய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்தது. அதை தொடர்ந்து விஜய்யின் எதிர்ப்பால் அந்த கட்சியை கலைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். எஸ் ஏ சியின் இதுபோன்ற செயல்களால் விஜய் அவரிடம் பேசுவதே இல்லை என்று கூட சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது ஒரு நேர்காணலில் எஸ் ஏ சந்திரசேகர் தன் மேல் விஜய்க்கு கோபம் இருந்தாலோ, அல்லது தான் செய்த சிறுதவறுக்காகவோ தான் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிவித்துள்ளார். மேலும் அவருடன் இருக்கும் புஸ்ஸி பாபு என்பவர்தான் தனக்கும் விஜய்க்குமான இடைவெளியைப் பெரிது படுத்தி பலன் பெற்று வருகிறார் எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

4 நாட்கள் தொடர் விடுமுறையில் ரிலீஸ் ஆகும் ‘கூலி’.. சன் பிக்சர்ஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஜொலிக்கும் அழகில் மிரட்டல் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

பாக்ஸிங் க்யூட்டி ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

இந்த படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க போராடினேன்… வீர தீர சூரன் ஹிட் குறித்து விக்ரம் மகிழ்ச்சி!

மூத்த நடிகர் அவர்கள் ரவிகுமார் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments