Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகன் விஜய் கட்சி குறித்து முதன்முறையாக மனம் திறந்த எஸ்.ஏ.சி.. என்ன சொன்னார் தெரியுமா?

Mahendran
புதன், 29 மே 2024 (14:18 IST)
தளபதி விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவருடைய தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி முதல் முறையாக மகனின் கட்சி குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். 
 
இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் தனது மனைவி ஷோபாவுடன் காஞ்சிபுரம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த நிலையில் அப்போது செய்தியாளர்கள் அவரது மகன் விஜய் கட்சி குறித்து கேள்வி எழுப்பினர். 
 
மகன் அரசியலுக்கு வருவதை விரும்பவில்லை என்று சொன்ன நீங்கள் இப்போது அவர் கட்சி ஆரம்பித்து உள்ளதை குறித்டு என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டதற்கு என்னுடைய ஆசீர்வாதம் எப்போதும் எனது மகனுக்கு உண்டு என்றும் அவரது கட்சி நன்றாக வளரும் என்றும் தெரிவித்தார். 
 
மேலும் விஜய்யின் கட்சியில் உங்கள் ஈடுபாடு இருக்குமா என்று கேட்டபோது கண்டிப்பாக இருக்கும் என்று கூறியவர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்திருக்கிறேன், இந்த நேரத்தில் தயவு செய்து அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று அவர் கூறினார். இதனை அடுத்து அவர் தனது மனைவியுடன் சாமி கும்பிட்டு விட்டு காரில் ஏறி புறப்பட்டு சென்றார். 
 
கடந்த சில நாட்களுக்கு முன் தான் விஜய் தனது அப்பா அம்மாவை சந்தித்த புகைப்படத்தை எஸ்.ஏ.சி வெளியிட்டு இருந்தார் என்பதும் அந்த புகைப்படம் வைரலானது என்பதும் தெரிந்தது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

'பிரதர்' படத்திற்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் உடன் மீண்டும் கைகோர்க்கும் ஜெயம் ரவி!

அங்கம்மாள் படம் மும்பை திரைப்பட விழாவில் (MAMI) அதிகாரப்பூர்வமாக தேர்வு!

100 நாட்கள் திரைப்படங்கள் ஓடி வெற்றி விழா கொண்டாடும் நிலை மாறி 4 நாட்களிலேயே போட்ட காசை எடுக்கும் நிலை வந்துள்ளது- அசத்தலாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி!

ஜீவா-பிரியா பவானி சங்கரின் ‘பிளாக்’ திரைப்படம் அக்-11ல் வெளியாகிறது!

ரஜினியின் உடல் பூரண நலமுடைய வேண்டி அபூர்வ ராகங்கள் முதல் வேட்டையன் வரை உள்ள ரஜினியின் 171 உருவங்களை மரப்பலகை மற்றும் களிமண்னால் வடிவமைத்து கொலு அமைத்த தீவிர ரஜினி ரசிகர்!

அடுத்த கட்டுரையில்
Show comments