Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுக்கும் எஸ் ஜே சூர்யா…. 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம்!

Webdunia
செவ்வாய், 18 அக்டோபர் 2022 (15:56 IST)
எஸ் ஜே சூர்யா தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். ஆனால் அவர் நடிகராக கடந்த சில வருடங்களாக இருந்து வருகிறார்.

ஒரு காலத்தில் தென்னிந்திய மொழிகளின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக இருந்தவர் எஸ் ஜே சூர்யா. ஆனால் நடிப்பில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக அவர் இயக்கத்தை விட்டார். நடிகராக ஒரு சில படங்கள் வெற்றி பெற்றாலும், அவரால் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க முடியவில்லை.

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் அவர் இறைவி படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். இந்த முறை கதாநாயகனாக மட்டும் நடிக்காமல் ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என எல்லா வகையான கதாபாத்திரங்களையும் கலந்து கட்டி நடித்தார். இப்போது அவர் நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை, பொம்மை, இரவாக்காலம் உள்ளிட்ட படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளனர். இப்போது சிவகார்த்திகேயனின் டான் மற்றும் சிம்புவின் மாநாடு ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் பல ஆண்டுகளாக இயக்கம் பக்கம் திரும்பாமல் இருந்த எஸ் ஜே சூர்யா, இப்போது 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பேன் இந்தியா திரைப்படம் ஒன்றை இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்துக்கு கில்லர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments