Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கும் வில்லன் ஆகிறாரா எஸ் ஜே சூர்யா?... திரை தீ பிடிக்கப் போகுது!

vinoth
செவ்வாய், 18 பிப்ரவரி 2025 (08:26 IST)
தமிழ் சினிமாவில் வேட்டை மன்னன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆனார் இயக்குனர் நெல்சன். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. அதன் பின்னர் சில ஆண்டுகள் கழித்து ‘கோலமாவு கோகிலா’ என்ற திரைப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுத்தார்.

அந்த படம் வெற்றியடைய அடுத்து சிவகார்த்தியோடு ‘டாக்டர்’ மற்றும் விஜய்யோடு ‘பீஸ்ட்’ மற்றும் ரஜினியோடு ‘ஜெயிலர்’ என அவர் கிராஃப் எகிறிக்கொண்டே செல்கிறது. இப்போது ஜெயிலர் 2 பட வேலைகளில் இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி இணையத்தில் வைரல் ஆனது.

ரஜினிகாந்த் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங்கை முடித்ததும் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இதற்கிடையில் ஜெயிலர் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக எஸ் ஜே சூர்யாவை நடிக்க வைக்க இயக்குனர் நெல்சன் ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பலருக்கும் வில்லனாக நடித்துக் கலக்கி வரும் எஸ் ஜே சூர்யா ரஜினியோடு மோதினால் திரைக் கண்டிப்பாக தீப்பிடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட இளைஞர்.. ரயில் நிலையத்தில் நடந்த திடுக்கிடும் சம்பவம்..!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments