Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்கிடுவாங்களோ - பதறிய எஸ்.ஜே.சூர்யா

உசுப்பேத்தி உடம்பை புண்ணாக்கிடுவாங்களோ - பதறிய எஸ்.ஜே.சூர்யா
, புதன், 2 செப்டம்பர் 2015 (20:26 IST)
கோவையில் சங்கம் ஒன்றை புதிதாக தொடங்கும் விழாவில் நடிகர் ராதாரவி கலந்து கொண்டார். அவரது பேச்சில் நடிகர் சங்க விவகாரம் சூடாக எதிரொலித்தது. 
 

 
விஷால் நடிகர் சங்கம் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று நெற்றிக்கண்ணை திறந்தவர், தலைவர் பதவிக்கு சரத்குமாரும், செயலாளர் பதவிக்கு அவரும், போட்டியிடுவதாகச் சொன்னார். அத்துடன் சிம்புவும் எஸ்.ஜே.சூர்யாவும் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றெnரு தகவலையும் உதிர்த்தார். 
 
எஸ்.ஜே.சூர்யாவின் காதில் தேள் வந்த பாய்ந்த மாதிரி கொட்டியது இந்த செய்தி. ஓட்டு கேட்டாங்க. போட்டுடறேன்னு சொன்னேன். அதுக்காக இப்படியா கோர்த்துவிடுவது என்று உடனே மறுப்பு தெரிவித்தார். சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேனே தவிர எந்தப் பதவிக்கும் நான் போட்டியிடவில்லை என்றார் தனது விளக்கத்தில்.
 
வட போச்சே என்று எஸ்.ஜே.சூர்யா கவலைப்பட சங்கப் பதவி ஒன்றும் தங்கப் பதவி இல்லையே.

Share this Story:

Follow Webdunia tamil