பெண்களின் மனதின் ஆழத்தை காண முடியாது என்பது உண்மை. அந்த பெண் நடிகையாக அமைந்துவிட்டால் ஆழம் என்ன அகலத்தையும் கூட காண முடியாது.
ராய் லட்சுமியைப் பார்த்தால் நன்றாக நடிப்பார், கவர்ச்சியாக ஆடுவார் என இரண்டே வார்த்தையில் யாரும் கடந்து போய்விடுவார்கள். அவருக்குள் ஒரு ஷோபனா ஒளிந்திருப்பது யாருக்கேனும் தெரியுமா?
ராய் லட்சுமிக்கு நடனத்தின் மீதிருக்கும் ஆர்வத்தை அவரே கூறியுள்ளார்.
"எனது மனதுக்குள் இருக்கும் உணர்வுகள் பற்றி யாருக்கும் தெரியாது. எனக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும். நான் மயங்கி கீழே விழும் வரை ஆடிக்கொண்டே இருப்பேன். இப்போது, நடனத்திலேயே புதுவிதமான முறைகளை கையாண்டு வருகிறேன். அது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. விரைவில் அது வெளிவரும்" என்று தெரிவித்துள்ளார்.
நீங்க ஆடுங்க மேடம்... பார்க்க தமிழ்நாடே காத்திருக்கு.