ஜூனியர் என் டி ஆர் & பிரசாந்த் நீல் படத்தில் இணைந்த ரிஷப் ஷெட்டி?

vinoth
செவ்வாய், 16 செப்டம்பர் 2025 (10:05 IST)
கேஜிஎஃப் படங்களுக்குப் பிறகு இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராக ஆகியுள்ளார் பிரசாந்த் நீல். இதையடுத்து அவர் இயக்கிய சலார் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸாகி தோல்வி படமானது. இதனால் அதன் இரண்டாம் பாகம் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில வாரங்களாக நடந்து வந்த நிலையில் சமீபத்தில் அதில் ஜூனியர் என் டி ஆர் கலந்துகொண்டார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்கிறார்.

இந்த படத்தில் வில்லனாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க ‘காந்தாரா’ புகழ் ரிஷப் ஷெட்டி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

சினிமாப் புகழ் என் குடும்ப வாழ்க்கையை பாதித்தது…. ஏ ஆர் ரஹ்மான் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments