Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இதை செய்யாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிட கூடாது: நீதிமன்றம் உத்தரவு..!

Siva
செவ்வாய், 12 நவம்பர் 2024 (07:58 IST)
சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், ரூ.20 கோடியை நாளைக்குள், அதாவது நவம்பர் 13ஆம் தேதிக்குள் செலுத்தாமல் அந்த படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திவால் ஆனவராக அறிவிக்கப்பட்ட மறைந்த அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெற்ற கடனை வசூலிப்பது தொடர்பாக கூறியபடி பணத்தை செலுத்தவில்லை என சொத்தாட்சியர் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இதனை அடுத்து, ரூ.20 கோடியை வரும் 13ஆம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியருக்கு செலுத்தாமல் ‘கங்குவா’ படத்தை வெளியிடக்கூடாது என ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ.55 கோடியை செலுத்தினால் மட்டுமே ‘கங்குவா’ திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அந்த பணத்தை செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நாளைக்குள் ரூ.20 கோடியை செலுத்தினால் மட்டுமே ‘கங்குவா’ படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.



Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’பீஸ்ட்’ நடிகர் சென்ற கார் விபத்து.. சம்பவ இடத்திலேயே தந்தை பலி.. அதிர்ச்சி தகவல்..!

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments