Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சினிமாவில் இருந்து உடனடியாக விலக தயார்: இயக்குநர்களுக்கு சவால் விட்ட நடிகர் சிம்பு!

சினிமாவில் இருந்து உடனடியாக விலக தயார்: இயக்குநர்களுக்கு சவால் விட்ட நடிகர் சிம்பு!
, புதன், 28 ஜூன் 2017 (17:55 IST)
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் கடந்த வாரம் ஜூன் 23ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இந்த படம் வெற்றிபெறவில்லை.

 
அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 3 கேரக்டர்களிலும் சிம்பு நடித்துள்ளார். அவருடன் நடிகை தமன்னா, ஸ்ரேயா, சனாகான், வி.டி.வி. கணேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
 
இப்படத்தின் தயாரிப்பாளருக்கு அதிக செலவு ஏற்பட்டதுக்கு காரணம் சிம்புவின் கால தாமதம்தான் காரணம் என தகவல் பரவியது. இதனை தொடர்ந்து தனது ரசிகர்களுக்கு இணையதளத்தில் நேரடியாக விளக்கம் கொடுத்துள்ள சிம்பு, 20 டேக், 25 டேக் எடுத்து படப்பிடிப்பை தாமதப்படுத்தியதாக என்னை வைத்து படம் இயக்கிய இயக்குனர்களில் ஒருவர் என்னை பார்த்து  கூறினால் கூட நான் சினிமாவில் இருந்து உடனடியாக விலக தயார் என சவால் விட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காலா படத்தில் நடிக்கும் ஆசையை வெளிப்படுத்திய தனுஷ்