Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி எப்படி உள்ளது. ராஷ்மிகா மந்தனா கருத்து..!

Mahendran
புதன், 15 மே 2024 (13:51 IST)
பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றி ராஷ்மிகா கூறிய கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் கூறியதாவது:
 
மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள குறித்து கூறிய ராஷ்மிகா, அடல்சேது என்ற பாலம் காரணமாக  பயண நேரம் குறைந்துள்ளது என்றும், இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா? என்று கேள்வி எழுப்பினார்.
 
கடந்த 10 ஆண்டுகளில் நாடு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளதாக கூறிய ராஷ்மிகா, இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்று தெரிவித்தார்.
 
மேலும் இந்தியா ஸ்மார்ட்டான நாடு, இளைஞர்கள் அதிகம் இருக்கும் நாடு,  இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது என்றும், அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள்  என்றும், நாட்டின் வளர்ச்சிக்காக மோடிக்கு வாக்களியுங்கள் என ராஷ்மிகா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments