Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமாவுக்கும் ஓடிடிக்கும் ஒன்னும் வித்தியாசம் இல்ல… ஆனா?- ராஷி கண்ணா கருத்து!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (09:27 IST)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, தற்போது தமிழில் பிஸியான நடிகைகளுள் ஒருவராக வலம்வந்து கொண்டிருக்கிறார். ஜெயம் ரவியுடன் அடங்கமறு படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து சமீபத்தில் வெளியாகி ஹிட்டான சர்தார் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி மற்றும் ஷாகித் கபூர் ஆகியோருடன் இணைந்து பார்ஸி வெப் சீரிஸில் நடித்திருந்தார். சமூகவலைதளங்களில் தீவிரமாக இயங்கும் ராஷிகண்ணா தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இப்போது ஸ்டைலிஷான உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன.

பார்சி தொடர் மூலமாக இந்தியா முழுவதும் தான் அறியபட்டுள்ளதாகவும், அதனால் இனிமேல் தன்னை இந்திய நடிகை என சொல்லிக்கொள்ளலாம் எனவும் ராஷி கண்ணா பெருமிதப்பட்டுள்ளார். மேலும் அவர் “இந்த தொடரை நான் ராஜ் & டிகே பெயரைக் கேட்ட உடனேயே ஒத்துக்கொண்டேன்” எனவும் கூறியுள்ளார். இந்தி சினிமாவில் தன் பயணத்தை ஆரம்பித்த ராஷி கண்ணா, இப்போது அங்கு மிகப்பெரிய ஹிட்டைக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமா மற்றும் ஓடிடி சீரிஸ்கள் பற்றி பேசியுள்ள அவர் “சினிமாவுக்கும் ஓடிடி தொடர்களுக்கும் பெரிய வித்தியாசம் எதுவும் இல்லை. ஆனால் திரையரங்கில் நம்மை நாமே பார்ப்பது போல ஓடிடியில் ஒரு அனுபவம் கிடைக்காது. அதனால் நான் திரையரங்க ரிலீஸ் படங்களுக்குதான் முன்னுரிமை கொடுப்பேன்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் ஷூட்டிங்கில் இழுபறி… இதுதான் காரணமா?

பிரபல ஓடிடியில் ரிலீஸ் ஆனது மோகனின் ‘ஹரா’ திரைப்படம்!

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

தங்கலான் டிரைலர் பற்றி வெளியான சூப்பர் தகவல்!

கிராஃபிக்ஸ் மேற்பார்வையாளர் என்னை ஏமாற்றிவிட்டார்… போலீஸ் நிலையத்தில் பார்த்திபன் புகார்!

அடுத்த கட்டுரையில்
Show comments