Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி படத்தில் நடிக்கும் மூன்று பேர்

Webdunia
திங்கள், 27 ஜூலை 2015 (12:56 IST)
ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் யார் என்பது முடிவாகிவிட்டது. முன்னணி நடிகர்களில் மூன்று பேர் மட்டுமே இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிரகாஷ்ராஜ், கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ்.
உதிரி வேடங்களில் நடிப்பவர்களுக்கு நடிப்புப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. ஒருநாள் ரஜினியும் அதில் கலந்து கொண்டார். படத்தில் நாயகியாக ராதிகா ஆப்தே நடிக்கலாம் என்று பேச்சு உள்ளது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, ரஜினி படத்தில் நடிக்க இதுவரை ஒப்பந்தமாகவில்லை. அதனால், இது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது என்றார்.
 
ராதிகா ஆப்தேயின் பதில் காரணமாக, ரஜினி படத்தின் நாயகி யார் என்பது இன்னும் புதிராகவே உள்ளது. 

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

Show comments