“என்னுடைய குழந்தையோடு நான் விளையாட முடியுமா?... “ ரன்பீர் கபூர் ஆதங்கம்!

Webdunia
சனி, 10 டிசம்பர் 2022 (09:11 IST)
ரன்பீர் கபூர் ஆலியா பட் தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது.

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் ரன்பீர் கபூர் சமீபத்தில் கலந்துகொண்ட சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்ட போது “நான் ஏன் ஒரு தகப்பனாக இவ்வளவு நேரம் எடுத்துகொண்டேன் என தெரியவில்லை. மிகப்பெரிய பாதுகாப்பின்மையை உணர்கிறேன். என் குழந்தைக்கு 20 வயது ஆகும் போது எனக்கு 60 வயது ஆகும். அப்போது என்னால் என் குழந்தையோடு நான் ஓடியாட விளையாட முடியுமா” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்
Show comments