Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போலீஸில் சிக்கிய ராணா: உதவ மறுத்த பிரபாஸ்!!

போலீஸில் சிக்கிய ராணா: உதவ மறுத்த பிரபாஸ்!!
, வெள்ளி, 5 மே 2017 (11:28 IST)
பாகுபலி 2 பாகங்களில் பாகுபலியாக நடித்த பிரபாஸும் பல்லாள தேவனாக நடித்த ராணாவும் படத்தில் மோதிக் கொண்டாலும் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்கள். 


 
 
ஆனால் ராணாவை போலிஸிடம் இருந்து காப்பாற்ற முன்வராத பிரபாஸ் பற்றி ராணா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
 
ராணா சேட்டை பிடித்தவர். ஒரு நாள் திடீரென பிரபாஸை ஏமாற்ற நினைத்த ராணா பிராபஸுக்கு போன் செய்து, நான் போலிஸிடம் மாட்டிக்கொண்டேன் கொஞ்சம் அவசரம் நீ வர வேண்டும் என பதற்றத்துடன் கூறியுள்ளார்.
 
ராணா என்ன தான் நன்றாக நடித்தாலும் பிரபாஸ் அதை கண்டுபிடித்துவிட்டார். உடனே பிரபாஸ், பாகுபலி 2 படத்தில் என்னுடன் நடித்துள்ளதாக போலீசாரிடம் கூறு அவர்கள் உன்னை விட்டுவிடுவார்கள் என கூறியுள்ளார்.
 
இந்த செய்தியை தற்போது ராணா கூறியுள்ளார். நடிகர்களுக்கு என்ன தான் போட்டி இருந்தாலும் வெளியுலகில் அனைவரும் நட்பு பாராட்டியே வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல சின்னத்திரை நடிகை கார் விபத்தில் சிக்கி பலி!