Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேயாக மாறி மிரட்ட வருகிறார் ரம்யா கிருஷ்ணன்

பேயாக மாறி மிரட்ட வருகிறார் ரம்யா கிருஷ்ணன்

பேயாக மாறி மிரட்ட வருகிறார் ரம்யா கிருஷ்ணன்
, திங்கள், 8 பிப்ரவரி 2016 (13:54 IST)
ரம்யா கிருஷ்ணன் படையப்பா படத்தில் ரஜினிகாந்துக்கே சவால் விடும் வகையில் 'நீலாம்பரியாக' அவர் வாழ்ந்து காட்டி, அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.



 


தமிழ் சினிமா வரலாற்றில், ஒரு கதாநாயகனுக்கு ஈடாக, ஒரு நடிகைக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது ரம்யா கிருஷ்ணனுக்கு. கடந்த வருடம் வெளிவந்த பெரிய அளவில் வெற்றியடைந்த ‘பாகுபலி’ படத்தில் ரம்யா கிருஷ்ணன் வலுவான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டுக்களையும் பெற்றார். இதைத் தொடர்ந்து, இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 
 
இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் கணவரும், பிரபல தெலுங்கு இயக்குனருமான கிருஷ்ண வம்சி இயக்கும் ‘ருத்ராக்ஷா’ என்ற தெலுங்கு படத்தில் ரம்யா கிருஷ்ணன் பேயாக அனைவரையும் மிரட்ட வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளன.
 
ரம்யா கிருஷ்ணன் இதுவரை அம்மன், குணச்சித்திரம், வில்லி ஆகிய கதாபாத்திரங்களில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இவர் பேயாக நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ரம்யா கிருஷ்ணன் பேயாக நடிக்கவிருக்கும் ‘ருத்ராக்ஷா’ படத்தில் சமந்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 
 
மேலும், படத்தின் நடிக்கும் பிற நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வும் நடைபெற்று வருகிறது. விரைவில், இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil