Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய அணி தோல்வி - ராம் கோபால் வர்மாவின் குசும்பு

இந்திய அணி தோல்வி - ராம் கோபால் வர்மாவின் குசும்பு
, வெள்ளி, 27 மார்ச் 2015 (09:21 IST)
யாரும் யோசிக்காத கோணத்தில் கருத்து சொல்லி ஆள்களை கவிழ்ப்பதில் பிஹெச்டி வாங்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.
 
இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்த வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், என் நாட்டு ரசிகர்கள் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தும் வரை, இந்திய அணியை மற்ற அணிகள் தோற்கடித்துக் கொண்டே இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ட்வீட் செய்து ரசிகர்களின் காயம்பட்ட நெஞ்சில் பெருங்காயத்தை தேய்த்திருக்கிறார். இந்த ஒன்றோடு அவர் விடவில்லை.
 
நாட்டு மக்களின் கிரிக்கெட் என்ற மோசமான வியாதியை குணப்படுத்துமாறு, என் நாட்டில் உள்ள எல்லா கடவுள்களையும் வேண்டிக் கொள்கிறேன் - என்றும்,
 
நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். ஏனென்றால் அது நாட்டிலுள்ள ஆண்களை வேலை செய்வதை நிறுத்திவிட்டு டிவி பார்க்க வைத்து விடுகிறது - எனவும்,
 
இந்தியா தோற்றதில் மகிழ்ச்சி. நான் கிரிக்கெட்டை வெறுக்கிறேன். அதைவிட அதிகமாக கிரிக்கெட்டை நேசிப்பவர்களை வெறுக்கிறேன் எனவும் ட்வீட் செய்துள்ளார். கொஞ்சம் வெளிப்படையான பேச்சு என்றாலும் வர்மாவின் கருத்து வரவேற்கப்பட வேண்டியதுதான்.

Share this Story:

Follow Webdunia tamil