Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அதிரடி முடிவெடுத்த பிரபல நடிகை - குஷியில் ரசிகர்கள்

அதிரடி முடிவெடுத்த பிரபல நடிகை - குஷியில் ரசிகர்கள்
, செவ்வாய், 30 மே 2017 (12:19 IST)
திரைப்படங்களில் முத்தக்காட்சிகளில் நடிக்க தயார் என ரகுல் பிரீத் சிங் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


 

 
தமிழில் தடையற தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை ரகுல்பிரீத் சிங், இங்கு சரியான வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு நம்பர் நடிகையும் ஆனார். 
 
தற்போது இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் மகேஷ்பாபு நடித்து  தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகும் ஸ்பைடர் படத்தில் கதாநாயகியாகவும், தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாகவும் நடித்துக்கொண்டிருக்கிறார்.
 
இந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரகுல்பிரீத் சிங் “ நடிகைகள் கவர்ச்சியாக தோன்றினால்தான் ரசிகர்கள் ரசிப்பார்கள். திரைப்படங்களில் முத்தக்காட்சிகளில் நடிப்பது தவறு கிடையாது. கதைக்கு தேவை என்றால் நானும் முத்தக்காட்சியில் நடிப்பேன். ஆனால், அது ஆபாசமாக இருக்கக்கூடாது. சில இயக்குனர்கள் படத்தின் விளம்பரத்திற்காக, வலுக்கட்டாயமாக முத்தக் காட்சிகளை திணித்து எடுக்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை” என அவர் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஸ்ருதிஹாசன் விலகல் ; சங்கமித்ரா படம் டிராப்?