Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னுடைய கதாபாத்திரங்களை கதைதான் தீர்மானிக்கும் - ராஜு முருகன்

Webdunia
வெள்ளி, 15 ஆகஸ்ட் 2014 (11:25 IST)
குக்கூ படத்தின் மூலம் நிறைய பாராட்டுகளையும், அதே அளவு கடுமையான விமர்சனத்தையும் சந்தித்தவர் ராஜு முருகன். வெகுஜனங்களை ஈர்க்கக் கூடிய அருமையான கதை சொல்லி.
அந்த ஒரு காரணத்துக்காகவே அவரது அடுத்தப் படம் குறித்து பல்வேறு வதந்திகள். முக்கியமாக தனுஷை ராஜு முருகன் இயக்குகிறார் என்பது. அதனை மறுபடியும் மறுத்துள்ளார் ராஜு முருகன்.
 
எனது அடுத்தப் படத்துக்கான கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். கதைதான் படத்தின் கதாபாத்திரங்கள் யார் என்பதை முடிவு செய்யும். அதற்கு முன்னால் இப்போது ஊடகங்களில் வரும் கற்பனைகளும், யூகங்களும் உண்மையில்லை. இதுவரை யாரும் தொடாத கதைகளத்தில் என்னுடைய அடுத்தப் படம் இருக்கும் என்றார்.
 
ராஜு முருகன் குரங்காட்டி நாவலை படமாக்குகிறார் என்றொரு வதந்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments