Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறையில் இருந்தாலும் அவர்தான் ஹீரோ

சிறையில் இருந்தாலும் அவர்தான் ஹீரோ
, வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:59 IST)
ராஜ்குமார் ஹிரானி ஒருவழியாக, முன்னாபாய் மூன்றாம் பாகத்துக்கான கதையை தேர்வு செய்துவிட்டார்.


 

 
முதலிரண்டு பாகங்களும் பம்பர் ஹிட்டான நிலையில், அந்த இரண்டையும் தூக்கிச் சாப்பிடுற கதையிருந்தால் மட்டுமே மூன்றாவது பாகம் என பிடிவாதமாக இருந்தார். இப்போது கதை கிடைத்திருக்கிறது.
 
முன்னாயபாயின் முதலிரண்டு பாகங்களிலும் சஞ்சய் தத் ஹீரோவாக நடித்தார். தற்போது அவர் சிறைப்பறவை. ஆக, அடுத்த வாய்ப்பு நாமாகவும் இருக்கலாம் என பல நடிகர்கள் நம்பிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு லாரி மண்ணை போட்டுள்ளார், ராஜ்குமார் ஹிரானி.
 
முதலிரண்டு பாகங்களிலும் நடித்த சஞ்சய் தத்தே இந்த மூன்றாவது பாகத்திலும் நாயகன். வேறு யாரையும் நடிக்க வைப்பதாக இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். 
 
பிரபலங்கள் சிறைக்குப் போனாலும் சேதாரமாவதில்லை. சாமானியர்கள் சாதனை புரிந்தாலும் மதிக்கப்படுவதில்லை.

Share this Story:

Follow Webdunia tamil