Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்? - ரஜினிகாந்த் வேதனை

Webdunia
திங்கள், 15 மே 2017 (14:18 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.


 

 
ரஜினிகாந்த் 10 வருடங்களுக்குப் பிறகு, இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினிகாந்த் “என்னுடைய படங்கள் வெளியாகும் போது, அது வெற்றியடைய மட்டுமே நான் ஏதாவது பேசுகிறேன் என சிலர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அது உண்மையில்லை. ரசிகர்களின் பேராதரவால் அந்த நிலை எனக்கு ஏற்படவில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியடையும். ரசிகர்களை ஏமாற்ற முடியாது. 
 
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தமிழர்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். அதுபற்றி நான் இங்கு பேசவிரும்பவில்லை” என சூசமாக பேசினார். 
 
அதவாது, அரசியல்வாதிகளிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்பதைத்தான் ரஜினி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் இதுவரை தமிழகத்தில்  அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள்தான் ஆட்சி நடத்தி வந்திருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் தைரியமாக ஒரு அரசியல் கருத்தை கூறியிருக்கிறார் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்