Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்கள் ஏன் இப்படி ஏமாறுகிறார்கள்? - ரஜினிகாந்த் வேதனை

Webdunia
திங்கள், 15 மே 2017 (14:18 IST)
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது ரசிகர்களை சந்தித்து உரையாடி வருகிறார்.


 

 
ரஜினிகாந்த் 10 வருடங்களுக்குப் பிறகு, இன்று சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தன்னுடைய ரசிகர்களை சந்தித்து வருகிறார். அப்போது பேசிய ரஜினிகாந்த் “என்னுடைய படங்கள் வெளியாகும் போது, அது வெற்றியடைய மட்டுமே நான் ஏதாவது பேசுகிறேன் என சிலர் பேசுகிறார்கள். எழுதுகிறார்கள். அது உண்மையில்லை. ரசிகர்களின் பேராதரவால் அந்த நிலை எனக்கு ஏற்படவில்லை. ஒரு படம் நன்றாக இருந்தால்தான் வெற்றியடையும். ரசிகர்களை ஏமாற்ற முடியாது. 
 
ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும் தமிழர்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள். அதுபற்றி நான் இங்கு பேசவிரும்பவில்லை” என சூசமாக பேசினார். 
 
அதவாது, அரசியல்வாதிகளிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுகிறார்கள் என்பதைத்தான் ரஜினி கூறியிருக்கிறார். அப்படி பார்த்தால் இதுவரை தமிழகத்தில்  அதிமுக, திமுக என்ற இரண்டு கட்சிகள்தான் ஆட்சி நடத்தி வந்திருக்கிறது. எனவே, ரஜினிகாந்த் தைரியமாக ஒரு அரசியல் கருத்தை கூறியிருக்கிறார் என அவரின் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கூலி படத்தின் ஓவர்சீஸ் வியாபாரம்.. இஷ்டத்துக்கு அடித்துவிடும் யூடியூபர்கள்.. உண்மை நிலை என்ன?

ஒரு புரமோவை கூட திட்டமிட்டு எடுக்க தெரியாத வெற்றிமாறன்? ரசிகர்கள் கிண்டல்..!

மறக்கவே மாட்டேன்.. விஜய் சந்திப்பு குறித்து விஜய்சேதுபதி மகனின் நெகிழ்ச்சி பதிவு..!

தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன்! முதல் படமே முத்திரை பதித்தாரா சூர்யா சேதுபதி? - பீனிக்ஸ் வீழான் திரை விமர்சனம்!

க்ரித்தி சனோன், ம்ருணால் தாக்குர், தமன்னா.. நைட் பார்ட்டியில் நடிகைகளோடு தனுஷ்!

அடுத்த கட்டுரையில்