Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெருசா நம்பி பெருசா ஏமாந்த ஈராஸின் அதிரடி முடிவு

Webdunia
செவ்வாய், 26 மே 2015 (19:39 IST)
சூர்யா, ரஜினி என மாஸ் நடிகர்களின் படங்களை பிரமாண்டமாக தயாரித்தும், விநியோகித்தும் பிரமாண்டமாக தோற்றுக் கொண்டிருந்த ஈராஸ் நிறுவனம் அதிரடி முடிவை எடுத்துள்ளது.

தற்போது அதை செயல்படுத்தியும் இருக்கிறது. சிறியதே அழகு - அதுதான் இப்போது இந்த நிறுவனத்தின் தாரக மந்திரம்.

ஈராஸ் அடுத்து தயாரிக்கும் இரு படங்களும் குறைந்த பட்ஜெட்டில் தயாராகின்றன. நடிப்பதும் சின்ன நடிகர்களே.

ஈராஸின் புதிய படம் ஒன்றுக்கு, எங்கிட்ட மோதாதே என பெயர் வைத்துள்ளனர். நட்டி நட்ராஜ் இதில் நடிக்கிறார். ராமு செல்லப்பா என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். இன்னொரு படம், பேரை தேடிய நாள்கள். அசோக் செல்வன் இதன் நாயகன். இயக்கம் அறிமுகமான ஆபிரகாம் பிரபு.

படங்களின் நடிகர் மற்றும் இயக்குனர்களின் பின்னணியைப் பார்த்தால் ஈராஸ் படமா இல்லை திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டின் படமா என்று சந்தேகம் எழும். பெரிய நடிகர்களை வைத்து பெரிதாக பல்பு வாங்குவதற்கு, சிறியது எவ்வளவோ அழகு.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments