Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேட்ட சேப்டர் க்ளோஸ்... தயாரிப்பாளரை செருப்பால் அடிக்க வேண்டும்?

Webdunia
புதன், 9 ஜனவரி 2019 (18:11 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.  

 
இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. இதே தினத்தில் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளதால் தமிழகத்தில் தியேட்டர்கள் சரிசமமாக பிரித்து இரு படங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  
 
ஆனால், தெலுங்கில் பேட்ட படத்திற்கு 10 சதவீத தியேட்டர் கூட கிடைக்காமல் திணறிவருகிறது. ஆம், பொங்கலை முன்னிட்டு அங்கு பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிக்கும் வினய விதேய ராமா ஆகிய படங்கள் வெளியாகின்றன.  
இந்த இரு படங்களுமே பெரிய ஹிரோக்களின் படங்கள் என்பதால் 90 சதவீத தியேட்டர்களை இவ்விரு படங்களுமே கைப்பற்றிவிட்டன. இந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள அசோக் வல்லபனேனி பேச்சால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
 
பேட்ட தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சியின் போது அசோக் வல்லபனேனி அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் யூவி க்ரியேஷன்ஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களை நாயுடனும்  மாஃபியாக்களுடனும் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 
 
அதோடு நிறுத்தாமல், குறிப்பிட்ட தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் குறித்து தவறாகப் பேசியதோடு, இந்த தயாரிப்பாளர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என கடுமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். எனவே, பேட்ட படமும் நாளை வெளியாயுள்ள நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் ரிலீஸ் பிரச்சனை ஏதேனும் வருமா என தெரியவில்லை...

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments