Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நண்பர் அழைப்பு - துடைப்பம் ஏந்துவாரா ரஜினி...?

Webdunia
வெள்ளி, 21 நவம்பர் 2014 (12:12 IST)
ரஜினியின் மிக நெருங்கிய நண்பர் என்றால் அது தெலுங்கு நடிகர் மோகன்பாபு. தனது இரு மகன்களில் ஒருவரையாவது ரஜினியின் மருமகனாக்க வேண்டும் என்று விரும்பியவர். அது நடக்காமல் போனதை மோகன்பாபு வெளிப்படையாகவே வருத்தத்துடன் கூறியிருக்கிறார். ரஜினியும் அவரும் வாடா போடா நண்பர்கள்.
 
பிரதமர் மோடி ஆரம்பித்து வைத்த தூய்மை இந்தியா திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்ட மோகன்பாபு சில கிராமங்களை சுத்தம் செய்தார். இப்போது அவர் தனது நண்பர் ரஜினிக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய அழைப்பு விடுத்துள்ளார். 
 

 
ஏற்கனவே கமல் இந்தத் திட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டதுடன் தனது பிறந்தநாளில் மாடம்பாக்கம் ஏரியை தனது ரசிகர்களுடன் தூய்மைப்படுத்தினார். அதேபோல் சமந்தா, தமன்னா போன்றவர்களும் துடைப்பம் எடுத்து தெருவையும் பள்ளிக்கூடத்தையும் சுத்தம் செய்தனர்.
 
அவர்களைப் போல் ரஜினியும் தூய்மை திட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்வாரா இல்லை ஷாருக்கான் போல, துடைப்பம் ஏந்த மாட்டேன் என்பாரா?
 
நமக்கென்னவோ சூப்பர் ஸ்டாரின் ரியாக்ஷன் மௌனமாகதான் இருக்கும் என்று தோன்றுகிறது.

நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் எங்கே? எப்போது?.. ஆச்சரிய தகவல்..!

’நாட்டை திருத்தனும்ன்னா ஒரே வழி மரண பயம்’: ‘இந்தியன்’ டிரைலர்..!

வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்.. பிடிக்க முயன்ற ஹாலிவுட் நடிகர் கொலை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அப்பா, அம்மாவுடன் தளபதி விஜய் எடுத்த புகைப்படம்.. எஸ்.ஏ.சியின் க்யூட் பதிவு..!

எங்க ஊரு பொண்ணுமா நீ.. முப்பாத்தம்மன் கோவிலில் ஜான்வி கபூர் தரிசனம்!

Show comments