Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷுட்டிங் பார்க்க ஆசைப்பட்ட ரஜினி

ஷுட்டிங் பார்க்க ஆசைப்பட்ட ரஜினி
, புதன், 23 ஏப்ரல் 2014 (11:14 IST)
ரஜினியிடமிருந்து நாலு வார்த்தை பாராட்டு கிடைப்பதை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறார்கள் திரையுலகில் உள்ளவர்கள். எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு அப்படியொரு பாக்கியம் சமீபத்தில் கிடைத்தது.
கோச்சடையானின் தெலுங்குப் பதிப்பான விக்கிரமசிம்ஹாவின் பாடல், ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைதராபாத்தில் நடந்தபோது ராஜமௌலியும் அதில் கலந்து கொண்டார். அப்போது ரஜினி அவரின் படங்கள் குறித்து பேசியுள்ளார். முக்கியமாக ராஜமௌலி தொடர்ந்து சரித்திரப் படங்கள் எடுப்பதை சிலாகித்து பேசியவர், உங்கள் படத்தின் அரங்கைப் பார்க்க ஆர்வமாக இருக்கிறது. படப்பிடிப்பு நடக்கும் போது சொல்லுங்கள், வருகிறேன் என்றிருக்கிறார். இதனை பெரும்பேறாக கருதுவதாக ராஜமௌலி தெரிவித்தார்.
webdunia
ராஜமௌலி மஹாதீரா என்ற சரித்திரப் படத்தை ராம் சரண் தேஜா, காஜல் அகர்வால் இருவரை வைத்து எடுத்தார். அந்தப் படம் ஆந்திர சினிமாவின் மைல் கல்லாக இன்றும் விளங்குகிறது. தற்போது தெலுங்கில் பாகுபலி என்ற பெயரில் (தமிழில் மகாபலி) சரித்திரப் படத்தை பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா நடிப்பில் எடுத்து வருகிறார். தெலுங்கு சினிமா சரித்திரத்தில் அதிக பொருட்செலவில் எடுக்கப்படும் படம் இது என்று கூறப்படுகிறது.
 
இந்தப் படத்தின் அரங்கைப் பார்க்கவே ரஜினி ப்ரியப்பட்டிருக்கிறார்.
 

Share this Story:

Follow Webdunia tamil