ரஜினிகாந்த நடிப்பில் உருவாகி வரும் 2.0 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மும்பையில் வெளியிடப்பட்டது.
மும்பையில் பிரம்மாண்டமான முறையில் 2.0 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோரின் கதாபாத்திரங்கள் 3டி தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டன.
2.0-வின் பர்ஸ்ட் லுக்கிற்கு பல்வேறு திரை நட்சத்திரங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்தின் மருமகனான நடிகர் தனுஷ், 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எந்திரன் படத்தில் ரஜினியின் பிரபலமான வசனமான ”டாட்” என்பதையும் குறிப்பிட்டிடுக்கிறார்.
சல்மான்கான் மற்றும் தனது தந்தை ரஜினிகாந்த் இருக்ககூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா தனுஷ் “எனக்கு மிகவும் பிடித்த இரு நபர்கள்” என தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யா ரஜினிகாந்த், இது அடுத்த கட்டம் என 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இது மட்டுமல்லாமல் ரஜினிகாந்தின் ரசிகர்கள் பலரும் 2.0 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கொண்டாடு வருகின்றனர்.