Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஜினி ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட நிர்வாகி

ரஜினி ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்ட நிர்வாகி
, திங்கள், 29 மே 2017 (17:30 IST)
ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது என ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.


 

 
ரஜினி தனது ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் குறித்து பேசினார். அன்று முதல் தமிழகம் முழுவதும் ரஜினி அரசியல் களம் குறித்து பலரும் பேசி வருகின்றனர். ஆனால் இதுகுறித்து ரஜினி இன்னும் வாய் திறக்கவில்லை.
 
ரஜினிக்கு எதிராக பலரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை எதிர்த்து ரஜினி ரசிகர்களுக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். 
இதைத்தொடர்ந்து ரசிகர் மன்றத்தினருக்கு கட்டுப்பாடுகளை விதிக்க, முழு உரிமையை ரசிகர் மன்ற நிர்வாகி சுதகரிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் சுதாகர் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த ரவி என்பவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருடன் அவருங்காலத்தில் ரசிகர்கள் எவ்வித தொடபையும் ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரஜினி ரசிகர் மன்றத்தினர் ஊடகங்களுக்கு பேட்டியளிக்க கூடாது. அதேபோல் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, என உத்தரவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சங்கமித்ரா படத்திலிருந்து வெளியேறிய ஸ்ருதிஹாசன்..