Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர் ஆர் ஆர் படத்துக்காக அரசின் உதவியை நாடும் ராஜமௌலி!

Webdunia
புதன், 2 ஜூன் 2021 (08:07 IST)
ஆர் ஆர் ஆர் படத்தின் மீதமுள்ள காட்சிகளை படமாக்க தெலங்கானா அரசின் உதவியை கோரியுள்ளாராம் ராஜமௌலி.

தென்னிந்தியாவின் பிரம்மாண்ட இயக்குனராக உருவாகியுள்ள ராஜமௌலி பாகுபலி படத்துக்குப் பிறகு ராம் சரண் மற்றும் ஜூனியர் என் டி ஆர் , அஜய் தேவ்கான் மற்றும் ஆலியா பட் ஆகியோரை வைத்து ஆர் ஆர் ஆர் என்ற வரலாற்றுப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஆலியா பட் மற்றும் ஹாலிவுட் நடிகை ஒருவர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் அஜய் தேவ்கான் சம்மதித்துள்ளார். இந்நிலையில் படத்தின் பெரும்பகுதிகள் படமாக்கப்பட்டு விட்ட நிலையில் இன்னும் சில காட்சிகள் மட்டும் படமாக்கப்பட வேண்டியுள்ளது.

ஆனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் படப்பிடிப்புக்கு வாய்ப்பில்லை. இந்நிலையில் தெலங்கானா மாநில அரசிடம் சிறப்பு அனுமதி கேட்டு ராஜமௌலி கோரிக்கை வைத்துள்ளாராம். அப்படி அரசு சம்மதிக்கும் பட்சத்தில் ஒரே கட்டமாக மீதியுள்ள படப்பிடிப்புகளை மொத்தமாக படமாக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான்.. என்ன காரணம்?

5 பிரபலங்கள் இருந்தும் மண்ணை கவ்விய ‘தக்லைஃப் வசூல்.. அதிர்ச்சி தகவல்..!

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments