Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கைதில் இருந்து தப்பிக்க 25 லட்சம் வழங்கிய ராஜ் குந்த்ரா… அடுத்தடுத்து வரும் புகார்!

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (17:50 IST)
ஆபாச படமெடுத்தது சம்மந்தமாக கைது செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்தவருமான ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர் மும்பையில் நேற்று திடீரென கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்களை தயாரித்து செல்போன் செயலிகள் மூலம் இவர் பணம் சம்பாதிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ராஜ்குந்த்ராவின் கைது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெண்கள் 3 பேர் தங்களை கட்டாயப்படுத்தி ஆபாச படத்தில் நடிக்க வைத்ததாக கூறி ராஜ்குந்த்ரா மீது புகார் அளித்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவருக்கு நீதிமன்றம் 3 நாட்கள் போலிஸ் காவல் அளித்து சிறையில் அடைத்துள்ளது.

இந்நிலையில் மும்பை ஊழல் தடுப்பு போலிஸாருக்கு வந்த மின்னஞ்சல்களில் ராஜ் குந்த்ரா இந்த வழக்கில் தான் கைதாகாமல் இருக்க மும்பை போலிஸாருக்கு சுமார் 25 லட்சம் வரை லஞ்சம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது சம்மந்தமாக இப்போது விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 ஹீரோ, 4 ஹீரோயின்கள் படத்தை தயாரிக்கும் ரவிமோகன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

யாஷிகா ஆனந்தின் ரீசண்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

குபேரா படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது?...வெளியான தகவல்!

தியேட்டரை கொளுத்துனா.. தீயணைப்பு கருவி வைங்க! - தக் லைஃப் வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments