Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராதாரவி பேசியது தப்புதான்: விக்னேஷ் சிவனை சமாதானப்படுத்திய ராதிகா!

Webdunia
ஞாயிறு, 24 மார்ச் 2019 (14:55 IST)
நயன்தாரா நடித்த 'கொலையுதிர்க்காலம்' திரைப்படம் ஒரிரு வருடங்களாக தாமதமாகி வருகிறது. இந்த படம் ஆரம்பிக்கும்போது இருந்த பல தொழில்நுட்ப கலைஞர்கள் தற்போது விலகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்கு தான் இசையமைக்கவில்லை என்று யுவன்ஷங்கர் ராஜாவே சமீபத்தில் கூறினார்
 
எனவே இந்த படத்தை திடீரென புரமொஷன் செய்யும் வகையில் நேற்று டிரைலர் ரிலீஸ் விழா நடத்தப்பட்டது. அதில் சம்பந்தமே இல்லாமல் ராதாரவி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். எதிர்பார்த்ததுபோலவே அவர் இந்த விழாவில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதிலும் நயன்தாரா குறித்து அவர் கூறிய ஒரு கருத்து திரையுலகினர்களையே அதிர்ச்சி அடைய செய்தது
 
இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ராதாரவிக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மூன்று டுவீட்டுக்களை இன்று பதிவு செய்து தனது ஆதங்கத்தை தெரிவித்தார். விக்னேஷ்சிவனின் டுவீட்டுக்கு பதிலளித்த ராதிகா, இன்று நான் ராதாரவியை சந்தித்து அவர் பேசியது தவறு என்று கூறினேன். நயன்தாரா போன்று ஒரு தொழில்பக்தி உள்ள நடிகையை பார்க்க முடியாது. அவரை பற்றி நன்கு தெரிந்தவர் என்ற வகையில் ராதாரவி பேசியது தவறு என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ டிரைலரே இப்போதே தயார் செய்த சுந்தர் சி..!

ரிலீசுக்கு 5 மாதங்கள் இருக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்துவிட்ட ‘ஜனநாயகன்’ விநியோகிஸ்தர்..!

ஷங்கர் அடுத்த படத்தில் ரஜினி, கமல் நடிக்கிறார்களா? வழக்கம்போல் வதந்தியை பரப்பும் யூடியூபர்கள்..!

நாங்கள் சில ஆண்டுகளாகவே கணவன் - மனைவியாக வாழ்ந்து வருகிறோம்: மாதம்பட்டி ரங்கராஜின் ஆடை வடிவமைப்பாளர் ஜாய்..!

ரூ.1000 கோடி கடன் வாங்கி தருவதாக மோசடி.. நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments