மிஷ்கின், ராம் நடிப்பில் சவரக்கத்தி படத்தை இயக்கி வருகிறார், மிஷ்கினின் சகோதரரான ஆதித்யா. அவர் தனது அடுத்தப் படத்தில் நடிக்க கபாலி நாயகி ராதிகா ஆப்தேயை ஒப்பந்தம் செய்துள்ளார்.
இதனை உறுதி செய்த ஆதித்யா, ராதிகா ஆப்தேயை என்னுடைய அடுத்தப் படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளேன். இதுவொரு நாயகி மையப்படம் என தெரிவித்தார்.
ஆதித்யா சொன்ன கதை பிடித்துப் போனதால் உடனே நடிக்க ராதிகா ஆப்தே ஒப்புக் கொண்டுள்ளார். சவரக்கத்தியிலிருந்து இந்தப் படம் முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்று ஆதித்யா தெரிவித்தார்.