Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்புவின் 'மாநாடு' படத்தின் நாயகி இவர்தான்!..

Webdunia
செவ்வாய், 8 ஜனவரி 2019 (07:50 IST)
சிம்பு நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கவுள்ள அரசியல் த்ரில் படமான 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு அவருடைய பிறந்த நாளான பிப்ரவரி 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உள்பட மற்ற நட்சத்திரங்களை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர்  வெங்கட்பிரபு பிசியாக உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் நாயகியாக ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஷிகண்ணா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'அடங்கமறு' திரைப்படம் ஒரு வெற்றிப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் போலீஸ் கேரக்டரில் ஆக்சன்கிங் அர்ஜூன் நடிக்கவுள்ளார். வெங்கட்பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் உருவாகும் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இந்த படம் அடுத்த ஆண்டு சிம்புவின் பிறந்த நாளான 2020 பிப்ரவரி 3ல் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments